Sunday, December 5, 2010

மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள்!



மருத்துவக் கல்லூரியில் முதல் நாள். மாணவர்கள் வகுப்பறையில் உட்கார்ந்திருந்தனர். எல்லோரும் பள்ளிப் படிப்பை முடித்து புதுசாக அந்த கல்லூரியில் சேர்ந்திருந்தார்கள். ஆசிரியர் உள்ளே நுழைந்தார். அவர் கையில் ஒரு மஞ்சள் திரவம் நிறைந்த ஜாடி இருந்தது. “இது மனித சிறுநீர். நீங்க எல்லாம் சிறந்த மருத்துவர்களாக வேண்டும் எனறால் எதையும் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். நீங்கள் பார்ப்பது, கேட்பது, தொடுவது, முகர்வது, சுவைப்பது, எதையுமே துல்லியமாக கவனிக்க வேண்டும்”.

இப்படி சொல்லி விட்டு, ஜாடியை திறந்து ஒரு விரலை சிறுநீரில் முக்கி, அதை வாயில் வைத்து சுவைத்தார். மாணவர்கள் அவரை ஆச்சரியத்துடனும் அருவருப்புடனும் பார்த்துக் கொண்டிருக்க, ஜாடி மாணவர்களிடையே கொடுக்கப்பட்டது. மாணவ மாணவிகள் அருவருப்போடு, ஆசிரியர் போலவே சிறுநீரை விரலால் தொட்டு சுவைத்து பார்த்தனர்.

கடைசி மாணவனும் சிறுநீரை சுவைத்த பின் ஆசிரியர் சொன்னார்: “உங்களில் ஒருவராவது உன்னிப்பாக கவனித்து இருந்தால், நான் ஜாடிக்குள்ளே ஆள் காட்டி விரலை நுழைத்து, என் நடு விரலை வாயில் வைத்ததை பார்த்திருப்பீர்கள்

No comments:

Post a Comment