Sunday, December 5, 2010

இலவசம்


பல வருடங்களுக்கு முன்னால் ஒரு இளம் தாய், பிறந்து ஒருவாரம் கூட ஆகியிருக்காத ஒரு குழந்தையுடன், ஒரு கறிக்கடையின் முன்பு வந்து, அந்த கறிக்கடைக்காரனிடம், இந்த குழந்தை உன்னுடைய குழந்தை. இந்த குழந்தைக்கு அப்பா நீ தான். இதற்க்கு நீ என்ன செய்யபோகிறாய் என்று அவனை மிரட்டினாள். அவனோ பயந்துபோய், சரி இந்த குழந்தைக்கு 16 வயது வரும் வரை தினம் நான் இலவசமாக கறி தருகிறேன் என்று வாக்குறுதி அளிக்கின்றான்.அங்ஙனமே, 16 வருடங்கள் உருண்டோடின. கடைசி நாளன்று அந்த கறிக்கடைக்காரன், ஒரு புன்சிரிப்புடன் கறி வாங்க வந்த அந்த 16 வயது வாலிபனிடம் கூறுகிறான் : "உன் அம்மாவிடன் கூறு, இதுதான் இலவசமாக பெறும் கடைசி இறைச்சியென்று. பின் உன் அம்மாவின் முகத்தில் தோன்றும் சோகத்தை கவனி" என்றான்.அந்த வாலிபனும் அம்மாவிடம் இதை கூறினான். அதற்கு அவள், அந்த கறிக்கடைகாரனிடம் சென்று கூறு : "கடந்த 16 வருடங்களாக பால், மளிகை, காய்கரிகள் அணைத்து இலவசமாகவே எங்களுக்கு கிடைக்கின்றன" என்றாள்.

No comments:

Post a Comment